welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Monday 9 July 2012

காலம் அறிந்து செயல்படுங்கள்!!



வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!





பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.

உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.

கண்ணதாசனின் வைரவரிகள்!




கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!





வெற்றிக்கு முன் வரும் தடைகள்!!




ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

Wednesday 4 July 2012

Enjoy life - வாழ்க்கையை அனுபவிக்க...



இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.

வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல...!!


 "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய இந்தியாவின் எதிர் காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.


தாயும் சேயும்
ஒவ்வொரு தாய், தந்தையும் தங்களுடைய குழந்தைகளிடம், தங்கள் உயிரினும் மேலாக பாசம் செலுத்துகின்றனர்.  அவனை வளர்ப்பதில், தங்கள் நேரம், பணம், உழைப்பு, பாசம் அனைத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள்.

வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய சிறுவன்


வாய்ப்புகள் பெரும்பாலும் தடைகள், தோல்விகள் என்ற உடைகளையே அணிந்து வருகின்றன. நேற்றைய தோல்விகளின் முன் இன்றைய வெற்றி வாய்ப்புகள் மறைக்கப் படுகின்றன. இன்று சரித்திரம் படைத்த வெற்றியாளர் அனைவரும், வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றியவர்கள் தான். சோர்ந்து போவதற்கான காரணங்கள் பல இருந்தும்.... தன் வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய இச்சிறுவனின் நம்பிக்கைதான்,

தன்னம்பிக்கை...



தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காக இப்பதிவு அர்ப்பணிக்கப்படுகிறது.
வணக்கம் நண்பர்களே..!

இன்றைய காலகட்டத்தில்

தன்னம்பிக்கை குறைவால் இன்றும் பல இளைஞர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்காமலே இருக்கின்றனர். தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிப்பெறுவது எப்படி எனப்பார்ப்போம்.

தோல்விக்கு 'குட்பை' சொல்லுங்கள்...


எடுத்த முயற்சிகளிலெல்லாம் தோல்வி.. எங்குப் பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின்நோக்கித் தள்ளிவிடுகிறது உலகு. எனக்கும் மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..நான் மட்டுமே இந்த உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவன். இப்படி மனிதன் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் வாழ்ந்தென்ன லாபம்? என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாலே அவன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும். 

போட்டோசாப் SHORTCUT KEYS....

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF