welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday 29 December 2011

நம்பிக்கை மிகுந்தவர்கள் ........

வணக்கம் நண்பர்களே.. !! நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவின் வழி காண்போம்.. நம்பிக்கை என்ற வார்த்தையே மனதில் ஒரு திடத்தைக் கொடுக்கக்கூடிய, தைரியத்தைக் கொடுக்கக்கூடிய வார்த்தை. அத்தகைய நம்பிக்கை மிகுந்தவர்கள் எப்படி செயல்படுவார்கள்? எப்படி ஒரு செயலை செய்து முடிப்பார்கள்? எப்படி வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கிறார்கள்.?அவர்களுடைய மனநிலை எப்படிப்பட்டது? அவர்களின் தன்மை என்ன என்பதைப் பற்றியதுதான் இன்றைய பதிவு..

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்..!!!


வணக்கம் நண்பர்களே!

மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.

சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்.. 

உபுண்டு இயங்கு தளத்தைக் கணினியில் நிறுவுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!

1)    முதன்மையாக எந்தக் கணினிச் சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
‘உபுண்டு’ (Ubuntu) வின் (மிகவும் புகழ்பெற்றது) சீனோம் (GNOME) சூழல் ஆகும்.  இது ஆப்பிளின் ‘மாக்’ தளத்தை ஒத்திருக்கும்.

நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் .......


வணக்கம் நண்பர்களே!

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

Malware பாதிப்பை நீக்கும் வழிகள்...


வணக்கம் நண்பர்களே!


உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை..


வணக்கம் நண்பர்களே!

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம்http://www.opera.com/mini/  இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
 
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF