welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday 31 January 2012

வே2 எஸ்.எம்.எஸ் - தகவல்...



தற்போது இந்நிறுவனத்திடம் 2.3 கோடி பேர்கள் பதிந்த வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இதுவரை இந்த இரு தளங்களும் மாதந்தோறும் பத்து லட்சம் என்ற அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வந்தன. இதன் மூலம் இனி வே 2 எஸ்.எம்.எஸ். நிறுவனம், இந்தியாவின் முன்னணி இன்டர்நெட் நிறுவனமாக இடம் பெறும். 
வே 2 எஸ்.எம்.எஸ். 2006 ஆம் ஆண்டில் வன பாலா என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜிங், சேட், இமெயில் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை இலவசமாகப் பரிமாறிக் கொள்ளலாம். இந்தியாவில் இயங்கும் சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை இந்த தளம் மூலம் அனுப்பலாம். செய்தி ஒன்றில் 160 கேரக்டர்கள் மட்டுமே இருக்க முடியும்.
அத்துடன் ஜிசேட், யாஹூ, பேஸ்புக் தளங்களில் மேற்கொள்வது போல ஒருவருக்கொருவர் டெக்ஸ்ட் வழி சேட் செய்திடமுடியும். உலகில் அதிகம் பயன்படுத்தும் இணைய தள வரிசையில், இது சென்ற மாதம் 509 ஆவது இடத்தையும், இந்தியாவில் 34 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. 
இந்த தளத்திற்கு ஏறத்தாழ 30 நாடுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஏழு லட்சம் புதிய பயனாளர்கள் பதிந்து கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டில் கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தளங்களில் முதல் பத்து இடத்தில் வே 2 எஸ்.எம்.எஸ். இடம் பெற்றிருந்தது. 
160by2.com நிறுவனம் 2003ல் இதே போல் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்தில் தலைமை அலுவலகம் இருந்தாலும், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் இதற்கு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன.


நன்றி.............நிலவைதேடி.. 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF