welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday 22 December 2011

இன்முகத்துடன்எதிர்பார்ப்போம்.

-என்.கணேசன்

கருவறையில்இருக்கையிலே
இருட்டறை தான்என்றாலும்
உணர்ந்தோம் ஒருபாதுகாப்பை.
வெளிச்சமும்பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம்பாதுகாப்பை
இழந்தே நாம்தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக்கொண்டோம்
உறவுகளை நாம்பெற்றோம்
நண்பர்களைக்கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்திசெய்ய
அனைத்தும் நாம்கற்றும் கொண்டோம்.

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம்பெறுவோம்
இழந்ததையேநினைத்திருந்தால்
புதியதையே பெறமறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம்வருந்தோம்
இனிப்பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன்எதிர்பார்ப்போம்.நன்றி...... http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF